திண்டுக்கல் கல்வி மாவட்டம் உ- குருவட்ட அளவிலான கால் பந்து போட்டிகள்

October 18, 2024

திண்டுக்கல் கல்வி மாவட்டம் உ- குருவட்ட அளவிலான கால் பந்து போட்டிகள் 21,22,23.08.2024 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. அதில் மூன்றாம் நாள் 23.08.2024 அன்று 14 வயதிற்குட்பட்ட மாணவர்கள் மற்றும் 17 வயதிற்குட் பட்ட மாணவர்களுக்கு அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி சார்பாக நமது வத்தலகுண்டு கே.பி.நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் கால்பந்து போட்டியில் 21.08.2024 மற்றும் 22.08.2024 அன்று கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று இறுதிச்சுற்று நடைபெற்றது. மேலும் 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு கால்பந்து போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியை எமது கல்லூரியின் துணை முதல்வர் திருமதி வித்யா அவர்கள் துவங்கி வைத்தார். மேலும் அன்னை வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு முத்துப்பாண்டி அவர்களை கவுரவிக்கும் விதமாக எமது கல்லூரியின் துணை முதல்வர் வித்யா அவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

திண்டுக்கல் கல்வி மாவட்டம் உ- குருவட்ட அளவிலான கால் பந்து போட்டிகள்கே.பி.நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திண்டுக்கல் கல்வி மாவட்டம் உ-குருவட்ட தடகள போட்டிகள்